திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com

அம்புலிப் பருவம்

எம்மைஇனி தாள்பவன் செம்மைமதி யவன்நீ
இயற்கையே வெண்மைமதியோன்
எற்றைக்கும் மிகுதண்மை யுடையரோ டுறவுகொளும்
இயல்பினால் எங்கள்ஐயன்
வெம்மையுடை யவர்களொடு மதிதொறும் மதிதொறும்
விராய்உறவு கொள்ளுவோன்நீ
வியக்கும்ஒரு தன்மையோன் எங்கள்கிரு பாமூர்த்தி
மெய்ம்மைஒரு கால்வளருவாய்
மும்மையுல கறியஒரு கால்தேய்கு வாய்இவை
முயங்காதொர் கால்ஒழிகுவாய்
மொழியும்நீ இவைஓர்ந்தும் ஆடவா என்றது
முழுக்கருணை காண்எஞ்ஞான்றும்
அம்மைஅனை யார்மருவு குன்றைநகர் ஆளியுடன்
அம்புலீ ஆடவாவே
அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே

[அ. சொ.]  செம்மை-செம்மையான, மதியவன்-அறிவுடையவன், அதாவது செம்பொருள் காணும் அறிஞர், வெண்மை மதியோன்-வெள்ளிய சந்திரன், வெள்ளறிவுடையவன்.  அறிவீனன் என்பது கருத்து.  எற்றைக்கும்-எக்காலத் தும், தண்மை-குளிர்ந்த அருட்பண்பு, இயல்பினால்-தன்மையால், வெம்மையுடையவர்கள்-பன்னிரண்டு சூரியர்கள், மதிதொறும்-மாதந்தோறும், விராய்-கலந்து, ஒருகால்-ஒரு பட்சத்தில், மும்மை உலகு-சுவர்க்க, மத்திமம் பாதாளமாகிய மூன்று உலகங்கள், இவை-இவ்வாறான தேய்தலும், வளர்தலும், முயங்காது-சேராமல்படி, ஓர்ந்தும்-அறிந்தும், எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அம்மை - தாய், அனையார்-போன்றவர், மருவு-சேரும், அ+மை எனப்பிரித்து அந்த மேகம் போன்ற கொடையுடையவர் எனினும் ஆம்.

    விளக்கம் :  இப் பாடலும் சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையினைக் கூறுகிறது.  சேக்கிழார் அன்பர்களை என்றும் அடிமை கொண்டு அருள்பவர் ஆதலின் எம்மை இனிது ஆள்பவன் என்றனர்.  சேக்கிழாரது அறிவு செம்பொருள் காணும் அறிவு.  செம்பொருளாவது இறைவன்.  இதனைச் சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மான் என்னும் அப்பர் அருள் மொழியால் தெளியலாம்.  திருவள்ளுவரும் இத்தகையவரை செம்பொருள் கண்டார் என்றே குறிப்பிட்டுள்ளனர்.  சந்திரன் வெண்மை மதியோன்.  அதாவது வெள்ளிய நிறமுடையன் இங்குக் கருதிய பொருள் பேதமையான அறிவுடையவன் என்பதாம்.  இப்பொருட்டாதலைத் திருவள்ளுவர் வெண்மை எனப்பதுவது யாதெனில் என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளதைக் காணவும்.    பறிமேலழகர் வெண்மை என்னும் சொல்லுக்கு அறிவு முதிராமை என்று விளக்கம் தந்ததைக் காண்க.  கம்பர் இப் பொருளில் இச் சொல்லை ஆண்டதை வெண்மை இல்லை பல கேள்வி மேவலால் என்ற தொடரில் அறிக.  நாலடியாரும், வெண்மையுடையார் விழுச் செல்வம் என்கிறது.  சேக்கிழார் இறைவனடி சேர்ந்த மெய்யன்பர்களிடத்தும், மாலற நேயம் மலிந்தவரிடத்தும் அன்புடையராய், அவர்களோடு உறவு கொண்டாடுபவர்.  இதனை இவர், மயலில்சீர்த் தொண்டனாரை யான்அறி வகையால் வாழ்த்தி, உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பு நம்பெருமான் என்றும், தூது கொள்பவ ராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வாம் என்றும் தாம் அடியரோடு உறவுகொண்டு உரைத்த மொழிகளைக் கொண்டு உணரலாம்.  ஆகவே, அவரை தண்மையுடையவரோடு உறவு கொள்ளும் இயல்பினான் என்றனர்.  தண்மையுடையவர்கள் பிறவியாம் கோடை நீங்கி, இறைவன் திருவடியாம் தண்ணடி சேர்ந்தவர்கள்.

    சந்திரன் பன்னிரண்டு ராசிகளிலும் சூரியனுடனும் தங்கித் தங்கி வருபவன்.  மேலும், அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றுபடுகிறார்கள் என்பது சோதிட மரபு.  சோதிட நூல்படி கருதப் படுகின்ற பாபக் கிரஹங்களாகிய சனி, இராகு, கேது ஆகிய கோள்களுடன் மதிஇருக்க நேரிடுகின்றது, சோதிட அமைப்பில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டு ராசிகள் கூறப்படுகின்றன.  இவ்ராசிகளில் ஒன்பது கிரகங்களும் உலாவி வருகின்றன.  அங்ஙனம் உலாவும்போது, சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாள் தங்கிச் செல்வதால், தீய கோள்களான சனி, ராகு, கேதுக்களையும் கூடும் வாய்ப்பு ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது.  ஆக இவனை வெம்மையுடையவர்களோடு உறவு கொள்ளுவோன் என்றனர்.

    சேக்கிழார் ஒரே தன்மையினர்.  அவரது வாழ்வில் குறைவு இல்லை.  என்றும் நிறைவே உண்டு அவரை அரசரும் அந்தணரும் போற்றிப் புகழ்ந்ததை முன்னரே பற்பல இடங்களில் கண்டோம்.  இதனால் அவரைக் குறைவற்றவர் ;  நிறைவுடையவர் என்பது புலனாகிறதன்றோ? சந்திரனுக்கு மாதந்தோறும் பதினைந்து நாள் வளர்ந்து நிறைதலும், பதினைந்து நாள் தேய்ந்து குறைதலும் இயல்பாக உள.  இதனை கீழ் நடு மேல் என்னும் மூன்றுலகங்களும் நன்கு அறியும்.  ஒரு தன்மையர் என்றனர்.  இதனைத் தேய்குவாய் என்ற அடியில் கூறினர்.  கிருபா மூர்த்தியாவார் அருள் வடிவினரான சேக்கிழார்.  ஒருகால் ஒழிவாய் என்றது அடியோடு உருவின்றி இருத்தலை என்க.  அதுவே அமாவாசை நாள்,மேல்கூறப்பட்ட குறைகள் பல சந்திரனிடத்து இருந்தும், ஆடவா என்று அழைத்தது சேக்கிழாரது கருணையே ஆகும் என்க.


ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை
ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு
பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா