நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்
நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம் :
அசுவினி :
நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்குவளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உண்டு. உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் , நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள் . நல்ல உடை, ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர் .
அஸ்வினி நட்சத்திரத்தலம் :
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரகன்நாயகி (பெரியநாயகி)
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் :
பரணி :
பரணி நட்சத்திரம் தரணி கட்டி ஆள்வார்கள் என்பது ஜோதிட வாக்காகும்.நல்ல முயற்சியான உழைப்பு இருந்தால் இது சாத்தியமாகும். நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றி தவறாக யார் சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ்வில் வெற்றி பெற போராடுவீர்கள்.சில நேரங்களில் உங்களது போராட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும்
பரணி-நட்சத்திரத்தலம் :
அருள்மிகு-அக்னீஸ்வரர்,திருக்கோயில்
மூலவர்:அக்னீஸ்வரர்
அம்மன்/தாயார்:சுந்தரநாயகி
தலவிருட்சம்:வன்னி,வில்வம்
பழமை:1000-2000,வருடங்களுக்குமுன்
ஊர் :நல்லாடை, நாகப்பட்டினம் மாவட்டம்
கார்த்திகை :
இளவயதிலேயே கஷ்டங்களையும், போராட்டங்களையும் சந்திக்கவேண்டி வரும். உங்கள் பண நிலைமை, சிறப்பாக இராது. உங்களுக்கு பளிச்சென்ற நல்ல தோற்றமிருக்கும் நீங்கள் பரவலாகப் புகழ்பெற்று விளங்குவீர்கள். நேர்மையும்,நாணயமும் கொண்டவர்கள். உங்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை முடித்துக் கொடுக்கும் திறமை, இருக்கிறது .
கார்த்திகை நட்சத்திரத்தலம் :
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்/தாயார் : துங்கபாலஸ்தானம்பிகை
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் : கஞ்சாநகரம் , நாகப்பட்டினம் மாவட்டம் .
ரோகிணி :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் தெய்வ ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் முலமாகத்தான், முக்கியமாக வருமானம் கிடைக்கும். நீங்கள், நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்த சாமர்த்திய சாலியாகவும் விளங்குவீர்கள் .
ரோகிணி நட்சத்திரத்தலம் :
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
மூலவர் : பாண்டவ தூதர்
அம்மன்/தாயார் : சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : காஞ்சிபுரம் . காஞ்சிபுரம் மாவட்டம் .
மிருகசீரிசம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், போரிலும், போர்சார்ந்த உத்திகளிலும், தந்திரங்களிலும் வெற்றி. மற்றவர்களிடம் மரியாதையோடும் பண்போடும், அரசு உயர் அதிகாரிகள் நல்ல மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். நேர்த்தியானவற்றை நன்கு உணர்ந்து பாராட்டக்கூடிய, சரியான பாதையைத்தான் தெரிந்தெடுப்பீர்கள் .
மிருகசீரிடம் நட்சத்திரத்தலம் :
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
மூலவர் : ஆதிநாராயணப்பெருமாள்
உற்சவர் : ஆதிநாராயணப்பெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : வன்னி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : எண்கண் , திருவாரூர் மாவட்டம்
திருவாதிரை :
உண்மைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டார்கள். புத்திசாலியாகவும். பிறருக்கு தர்மம் செய்யவும், முன் கோபம் கொண்டவராகவும், தைரியசாலியாகவும் விளங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில், வசதிகளும் சுகபோகங்களும் இராது. கடினமான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும். செலவாளியாக இருப்பதுடன், துன்பங்கள்நேரிடும் போதும், மனம் கலங்காமல் இருப்பவர் .
திருவாதிரை நட்சத்தித்தலம் :
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : அபய வரதீஸ்வரர்
அம்மன்/தாயார் : சுந்தர நாயகி
தல விருட்சம் : வில்வம்,வன்னி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : அதிராம்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டம்
புனர்பூசம் :
நீங்கள் பொறுமை சாலியாகவும், அமைதியான சுபாவமுடையவராகவும், நல்ல குணத்துடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவராகவும், மதிப்பும், மரியாதையும், தாராள சிந்தையுடையவராக இருப்பீர்கள் . குழந்தைகள் முலம் மன நிறைவு பெற்று, நல்ல செல்வந்தராக விளங்குவீர்கள். ரத்தினக் கற்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடும் சொந்தத்தில் சொத்துக்களும் இருக்கும். நீங்கள் விரிவாக, பல இடங்களில் பயணம் செய்வீர்கள்.
புனர்பூசம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : அதிதீஸ்வரர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி, பிரகன் நாயகி
தல விருட்சம் : அகண்ட வில்வமரம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வாணியம்மைபாடி
ஊர் : வாணியம்பாடி , வேலூர் மாவட்டம்
பூசம் :
உங்கள் விருப்பங்கள் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும் பொதுவாக பலரும் உங்களை விரும்பி நேசிப்பார்கள் சமய ஈடுபாடும், தாராள சிந்தையும், மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையும், காணப்படும். நன்கு படித்த புத்திசாலியாகவும், தெய்வ நம்பிக்கையுடன், வசதியான வாழ்க்கை நடத்துவீர்கள். நீங்கள் மிகுந்த அதிருஷ்ட சாலியாகவும், செல்வந்தராகவும, நல்ல உடல்கட்டுடன் விளங்குவீர்கள்.
பூசம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : அட்சயபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : அபிவிருத்தி நாயகி
தல விருட்சம் : வில்வமரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : விளங்குளம் , தஞ்சாவூர் மாவட்டம்
ஆயில்யம் :
வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் கூட எளிமையாக இருப்பார்கள் . தந்தை, தாய் அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உதவிக்காக போய் நிக்க மாட்டீர்கள் சில சில சிரமங்களை அனுபவித்தாலும் யாரிடமும் வெளியில் காட்டிகொள்ள மாட்டீர்கள்
ஆயில்யம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : கற்கடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : அபூர்வநாயகி, அருமருந்துநாயகி
தல விருட்சம் : நங்கை மரம்
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருந்துதேவன்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
மகம் :
நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும, வியாபாரத்தில் வெற்றியுடன், சுகபோகமான வாழ்க்கை நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள் தெய்வகாரியங்களில் ஈடுபாடு இருக்கும். மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள் . பெற்றோர்களிடம் , கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய, சுபாவம், குடிகொண்டிருக்கும். எண்ணமும் செயலும், திட்ட வட்டமானதாக அமைந்திருக்கும்.
மகம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மகாலிங்கேஸ்வரர்
அம்மன்/தாயார் : மரகதவல்லி , மாணிக்கவல்லி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : விராலிப்பட்டி , தவசி மேடை , திண்டுக்கல் மாவட்டம் .
பூரம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும் கொண்டிருப்பீர்கள. நிதிநிலை அவ்வளவு வசதியாக இராது .
பூரம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
அம்மன்/தாயார் : பிரஹன்நாயகி (பெரியநாயகி)
தல விருட்சம் : மகிழமரம்
தீர்த்தம் : ஹர தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவரங்குளம் , புதுக்கோட்டை மாவட்டம்
உத்திரம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்க, கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும்,பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். நீங்கள்,உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கை நடத்துவீர்கள.உங்கள் உடல் எடை அதிகரித்திடலாம் கவனம் தேவை.
உத்திரம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மாங்கல்யேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : பவளமல்லி
தீர்த்தம் : கிணறு
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : இடையாற்று மங்கலம் . திருச்சி மாவட்டம் .
அஸ்தம் :
இந்த நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். 30 லிருந்து 32 வயதுவரையான காலத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள்.
அஸ்தம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்
மூலவர் : கிருபாகூபாரேச்வரர்
அம்மன்/தாயார் : அன்னபூரணி
தல விருட்சம் : வில்வம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : கோமல். நாகப்பட்டினம் மாவட்டம்
சித்திரை:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், தரம சிந்தனை இருக்கும்.அன்பான குணம் கொண்டவர்களைமிகவும் விரும்புவீர்கள். போர், உத்திகள் பற்றிய பல விஷயங்கள் , உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிப்பும், அறிவும், பணமும் படைத்தவரான நீங்கள், சத்திய வாதியாக விளங்குவீர்கள். நீங்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில் உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும் .
சித்திரை நட்சத்தித்தலம் :
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
மூலவர் : சித்திரரத வல்லபபெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூமிதேவி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :
ஊர் : குருவித்துறை , சோழவந்தான், மதுரை மாவட்டம்
சுவாதி ;
நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், விளங்கு வீர்கள் உங்களுக்கு சமயப்பற்று இருக்கும்.தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பீர்கள். உங்கள் உணர்ச்சி வெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள். மனதில் ஏற்படும் காம எண்ணங்களை குறைத்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் தேர்ச்சி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள்.
சுவாதி நட்சத்தித்தலம் :
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : தாத்திரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பூங்குழலி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சித்துக்காடு, சென்னை மாவட்டம்
விசாகம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள் ஆனால் பொறாமையும், பகைமை உணர்வும் உங்களிடம் இருக்காது. இயற்கையிலேயெ ஞானமும், அறிவும் இருக்கும் உங்கள் மனநிலை சில நேரம் சஞ்சலம் கொண்டதாக இருந்தாலும் பின் தெளிவாகிவிடுவீர்கள்.
விசாகம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
மூலவர் : முத்துக்குமாரசுவாமி
தீர்த்தம் : பூஞ்சுனை
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : பண்பொழி ,தென்காசி, திருநெல்வேலி மாவட்டம்
அனுஷம்: :
இளவயதிலேயே சிரமப்பட்டாலும், பிற்காலத்தில் நல்ல செல்வந்தராகவும், பெரும்பாலும் அயல் நாட்டில் வசிக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். பயணம் செய்வதில் உங்களுக்கு நல்ல விருப்பமிருக்கும். நீங்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றவராகவும், பணம் ஈட்டுவதில் படுசாமர்த்திய சாலியாகவும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், உதவியும் செய்வீர்கள் .
அனுஷம் நட்சத்திரத்தலம் :
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மகாலட்சுமீஸ்வரர்
அம்மன்/தாயார் : உலகநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : நீலப்பொய்கை
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்
கேட்டை :
இந்த நட்சத்திரத்திரத்தில் பிறந்தவராதலால், அழகான குணமும், மனதில் அன்பும் இருக்கும்.பலவிதமான கலைகளை கற்பார்கள். போராட்டமான வாழ்வு அமைந்தாலும் பிற்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றவராக இருப்பார்கள். யாரையும் பொருபடு