இராஜ யோகம்,Kulandaivel, kulandaivel.T, Chennai, kulandaivel Thiruvasagam, kulandaivel MCA,UI Architect, Angular, React Kulandaivel Mphil, kulandaivel MCA Mphil, https://www.linkedin.com/in/kulandaivelt/, https://twitter.com/kulandaivel_t, http://www.kulandaivelt.com, http://www.k4kalyanam.com, Web developement, kulandaivel UI Architect, Kulandaivel Banglore, IT Team Lead'>
திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com

இராஜ யோகம்

1. இராஜ யோகம் :

கிரகங்கள் கூட்டு யோகமாகும் .யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது .ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே .

இராஜ யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது ,அனுபவிப்பது ,பணப்புழக்கம் அதிகம் இருப்பது ,உயர் நிலையில் இருப்பது மேலும் கலெக்டர் ,பெரிய வர்த்தகம் செய்பவர் ,டாக்டர் ,எஞ்சினியர் ,உலகமறிந்த விளையாட்டு வீரர் ,விரும்பப்படுகிற சினிமா நடிகர் / நடிகை ,மதத் தலைவர் போன்றவர்களுக்கு எல்லாம் சுப பலனை தரக்கூடிய கிரக கூட்டு இருப்பதே காரணம் .

இராஜ யோகங்களை தரக்கூடிய சில கிரக கூட்டுகள் பற்றி காண்போம் .

1. 5,9 ம் வீட்டு அதிபதிகளுடன் 1,4,7,10 ம் வீட்டு அதிபதிகள் சொந்த வீட்டில் அமர்வது சுப யோகம் ஆகும் . அது மேலும் லக்னமாகி சூரியன் ,சந்திரன் சேர்ந்து தங்களது சொந்த வீட்டில் அமர்வது அல்லது இருவரும் 1,4,5,9,10 ல் அமர்வது இராஜயோகம் ஆகும் .இந்த அமைவு பெற்று ஜாதகர்க்கு இராஜயோகத்துடன் இருப்பார் .

2. ரிஷபம் லக்னமாகி 9,10 ம் ஆதியாகிய சனி 5 ம் வீட்டதிபதி புதனோடு கேந்திரத்திலே ,திரிகோணத்திலே இருப்பது .

3. மிதுனம் லக்னமாகி 1,4 க்குடைய புதன் 10 ம் ஆதி குரு அல்லது 5 ம் ஆதி சுக்கிரனோடு இணைவது .

4. கடகம் லக்னமாகி சந்திரன் 5,10 ம் ஆதி செவ்வாயோடு 11,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .

5. சிம்மம் லக்னமாகி சூரியன் 4,9 ம் ஆதி செவ்வாயோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .

6. கன்னி லக்னமாகி 1,10 ம் ஆதி புதன் , 4,7 க்குரிய குரு அல்லது 2 , 9 க்குரிய சுக்கிரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .

மேலும் புதன் ,சுக்கிரன் 3 ல் இணைந்து 9 ம் வீட்டைப் பார்ப்பதும் இராஜயோகமாகும்.

7. துலாம் லக்னமாகி 4, 5 க்குடைய சனி, 2 ,7 க்குரிய செவ்வாய் அல்லது 9 க்குரிய புதன் அல்லது 10 க்குரிய சந்திரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .

8. விருச்சகம் லக்னமாகி 5 க்குரிய சந்திரன் அல்லது 10 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .

9. தனுசு லக்னமாகி 1 ,4 க்குரிய குரு 5 க்குரிய செவ்வாய் அல்லது 10 க்குரிய புதன் அல்லது 9 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .

10. மகரம் லக்னமாகி சனி 5,10 க்குரிய சுக்கிரனோடு இணைவது .

11. கும்பம் லக்னமாகி சனி 4,9 க்குரிய சுக்கிரனோடு இணைவது .

12. மீனம் லக்னமாகி 1,10 க்குரிய குரு 4,7 க்குரிய புதனோடு அல்லது 9 க்குரிய செவ்வாயோடு இணைவது

மேலும் 4 வகையான இராஜயோகம் கிழ்க்கண்ட வழிவகைகளில் உருவாகிறது

1. 1,5,9 ம் ஆதிகள் இணைவது

2. 2,6,10 ம் ஆதிகள் இணைவது

3. 3,7,11 ம் ஆதிகள் இணைவது

4. 4,8,12 ம் ஆதிகள் இணைவது

1, 5, 9 :

1. இந்த வகை இணைவு ஜாதகரை சமுதாயத்தில் பெரிய மனிதராகவும் தலைவராகவும் அல்லது விஞ்ஞானி ,மகான் நிலைக்கு கொண்டு செல்லும் .

2, 6,10:

2. இவர்கள் வெளிநாடு சென்று அதிக வருவாய் ஈட்டும் நிலைக்குக் கொண்டு செல்லும் .இவர்கள் குடும்பமே பெரிய வர்த்தகர்களாகவும் ,அரசாங்கத்தால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள் .

3, 6,11:

3. மிகவும் தைரியசாலிகளாகவும் தன் உழைப்பால் முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள் .

4, 8,12:

4. இவர்கள் மறைமுக நடவடிக்கை மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவும்,கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்களாகவும் சொத்தின் மேல் பற்றுடையவர்களாகவும் இருப்பார்கள் .

2. கால சர்ப்ப யோகம் .

ராகு,கேதுகளுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் அமைவது .பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த அமைவு கெடு பலனைத் தரும் என்று கூறுகிறார்கள் .ஆனால் இது அப்படியல்ல .இவ்வமைப்பு உள்ளவர்கள் இயற்கையிலேயே தைரியசாலிகளாகவும் ,தன்னை வெளிக்கொணர்வதில் ,நிலை நாட்டுவதில் குறிக்கோள் உடையவர்களாகவும் ,மிக விரைவில் பிரபலம் அடைபவர்களாகவும் இருப்பவர்கள் .குறிப்பாக 10 ம் அதிபதி ரகுவுடன் தொடர்பு அல்லது ராகு 3 அல்லது 5 ல் அமைவது இத்தகைய யோகத்தைத் கண்டிப்பாக கொடுக்கும் .

3. திருமணப் பொருத்ததில் சில நுணுக்கங்கள் .

ஒரு ஆணின் ஜாதகமும் ,பல பெண்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் பொருத்தம் பார்க்க வந்தால் எப்படிப் பொருத்தம் பார்ப்பது ?

1. ஆணின் ஜாதகத்தில் 10 மிடம் அல்லது 10 ம் அதிபதி அமர்ந்த இராசி எதுவோ அதுவே அவர் மனைவின் ராசியாகும் .

உதாரணமாக ஒரு சிம்ம லக்னம் ஆணிற்கு 10 மிடம் ரிஷபம் .அந்த சுக்கிரன் கடகத்தில் .இந்த அமைப்பில் உள்ள ஒரு வரனுக்கு 50 பெண்களின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வருமானால் அந்த 50 ஜாதகங்களில் ரிஷபம்,கடகம் ,துலாம் இந்த ராசியுடைய பெண்களின் ஜாதகம் மட்டும் எடுத்து பொருத்தம் பார்ப்பது நலம் .

2. மற்றொரு வகை .வரணின் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி அல்லது அந்த ராகுக்கு இடம் கொடுத்தவர் அமர்ந்த ராசி எதுவோ அது பெண்ணின் ராசியாக இருக்கும் .

3. ஆணின் ஜாதகத்தில் உள்ள ராகு ,கேதுகளுக்கு ,1,5,9, ல் பெண்ணின் ராகு ,கேதுவோ அல்லது கேது,ராகுவோ அமைந்து இருக்கும் ஜாதகம் பொருந்தும் .

4. காணாமல் போன பொருள் கிடைக்க .

ஆருடம் :

ஜாதகர் ஒரு பொருளை இழந்து விட்டு வந்து நம்மிடம் ஆருடம் கேட்க வந்தால் :

அன்றைய கோச்சார கிரகத்தை ராசிக்கட்டத்தில் அமைத்து வந்த நேரத்தில் உதய லக்னம் பிடிக்கவும் .

1. இந்த லக்னத்திற்கு 6 ல் பாவ கிரகங்கள் இருந்து 6 ம் அதிபதி லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பார்த்தல் பொருள் களவு போயிற்று.மேலும் லக்னாதிபதி 6 ல் இருந்தால் களவு போனது உறுதி .

2. லக்னாதிபதி12 ல் இருந்தால் பொருளை மறதியாக எங்கோ வைத்து விட்டார் .

தீர்வு :

1. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ சுப கிரகங்கள் பார்த்தால் பறிபோன பொருள் ,கை நழுவிய பொருள் ,மறதியாக வைத்த பொருள் ,திரும்பக் கிடைக்கும் .

2. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பாவ கிரகங்கள் மட்டும் பார்த்தால் பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பில்லை .

5. மற்றும் சில

1. ஜெனன காலத்தில் சனியை குரு பார்த்திருந்தாலும் சனியுடன் குரு சேர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இரண்டொரு முறை கடல் கடந்து வெளிநாடு சென்று தொழில் துறையில் பெரும் பணத்தை சம்பாதிப்பதுடன் எதிர்காலத்திலும் உயர்வான வாழ்க்கை அமைந்திடும் .

2. 9 ல் புதன் இருந்தாலும் அல்லது 9 க்குடையவர் 8 ல் இருந்தாலும் ,அல்லது ராகு 9 லிலோ அல்லது 5 லோ இருந்தால் அடிக்கடி செலவும் ,பொருளாதாரத்தில் சரிவும் ஏற்படும் .

3. திக் பலம் :

புதன் ,குரு -கிழக்கிலும் -அது லக்னத்திலும்

சூரியன் ,செவ்வாய் ,தெற்கிலும் -அது 10 லும்

சனி -மேற்கில் -அது 7 ல் ,

சந்திரன் ,சுக்கிரன் -வடக்கிலும் -அது 4 லும் ,

திக் பலம் உள்ளவர்கள் .

4 . (1) லக்னாதிபதிக்கு 10 ல் புதன் பலன் பெற்றிருந்து ,7 ம் அதிபதிக்கு 3 ல் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பலரோடு சரீர சம்பந்தப்படுவார் .

(2) 2,12 க்குடையார் 3 லிருந்து குருவினால் பார்க்கப்பட்டோ அல்லது 9 க்குடையரால் பார்க்கபட்டாலோ மேற்கூறிய பலனே .

(3) 3,7,11 க்குடையவர்கள் சேர்ந்திருந்தாலும் ,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் ,பலம் பெற்று திரிகோணத்திலிந்தாலும்,மேற்கூறிய பலனே .

(4) பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு தொடும் காலக் கட்டம் -வீடு ,வண்டி ,வாகனம் வாங்கும் கால கட்டமாகும் .

(5)அட்டமாதிபதிக்கு 1,5,9 ல் சனி வரும் கால கட்டம் ஜாதகருக்கு கண்டம் அல்லது கண்டத்திற்கு ஒப்பான கால கட்டம் .

(6) 2,4,12 ம் ஆதிகளில் எத்தனை பேர் கோந்திரங்களில் இருக்கிறார்களோ அத்தனை வீடு ஜாதகருக்கு அமையும் .

4. கடன் :

(1) 2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர்கள் புத்தியில் கடன்பட வேண்டும் .

(2) 11 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர் புத்தியில் கடன்பட வேண்டும் .

(3) 6 க்குடையவர் திசையில் 8,12 க்குடையவர் புத்தி ,

(4) 12 க்குரியவர் திசை 6,12 க்குரியவர் புத்தி ,

(5) 12 க்குரியவர் திசை 6,8 க்குரியவர் புத்தி ,

(6) எந்த வீட்டுக்குரிய கிரகமாக இருந்தாலும் , 6,8,12 க்குடைய வீட்டில் இருந்தால் அந்த தசா புத்தி காலங்களில் கடன்பட வேண்டும் .

6.கடன் தீர்வு :

(1) 5,9 க்குடைய புத்திகள் நடைமுறையில் இருந்தால் (இவர்கள் 6,8,12 ல் இருந்தாலும் ) இவர்களே கடனை ஏற்படுத்தினாலும் அவர்கள் புத்திலேயே கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் .

(2) ஆட்சி பெற்ற 2, 11 க்குடையவர்கள் புத்தி நடைமுறையில் கடன் பிரச்சனை தீரும் . 7. 7 ல் சுக்கிரனும் ,செவ்வாயும் இருந்தால் விதவையை மணம் புரிவார் .

8. சுக்கிரன் ,செவ்வாய் ,சனி மூவரும் 7 ல் இருந்து இவர்களில் ஒருவர் ஆட்சி பெற்றிருந்தாலும் வாழ்வில் வழி தவறிய பெண்களுக்கு வாழ்வு கொடுப்பார் .

9. ராகு காலம் நன்மை :

ஒருவர் ஜாதகத்தில் ராகு 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் , ஜாதகர் இராகு காலத்தில் எதைச் செய்தாலும் நன்மையாகும் .

10. எமகண்டம் நன்மை :

சனி 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கபட்டால் இவர்கள் செய்யும் காரியம் எமகண்டமாக இருந்தாலும் வெற்றிகரமாக முடியும் .காரணம் சனிக்கு அதிதேவதை எமன் .

11. 7 க்குடையவர் 7 மிடதிற்கு 3,6,10,11 ல் சுக்கிரன் இருந்தால் விவாஹ்த்திற்கு பிறகு பாக்ய விருத்தி உண்டாகும் .

12. சனி ,சூரியனைப் பார்த்தால் (தொடர்பு)ஜாதகர் பரம்பரத் தொழிலைச் செய்வார் .

 


ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை
ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு
பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா