ஐந்தாம் பாவகம்
5ஆம்
வீடு இரைப்பை, கணையம் (Stomach,Liver )
குழந்தை. பாட்டன்.
வம்சா வழி அத்துனையும். பாட்டிகள். பூர்வ புண்யம். மனம். எண்ணம். காதல். சந்தோஷம்.
அதிர்ஷ்டம். யோகம். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம். உபாசனை
(இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு. வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி. ஸ்டாக்
எக்சேஞ்ச் சூதாட்டம்------------------------------------------------------------------------------5. குழந்தைகள்,
படைப்பாற்றல், உளவியல் மனநிலை, ஊக்கம், புலனாய்வு, வயிறு.
வேடிக்கை, விளையாட்டுகள், விளையாட்டு,
நடிப்பு, நாடகம், திரையரங்குகள்,
பொழுதுபோக்கு, மற்றும் நமது படைப்பு ஆற்றலை
சரியாக அல்லது தவறாக பயன்படுத்துவதை இந்த இடம் சுட்டிக்காட்டும். செக்ஸ், மகிழ்ச்சி, நல்ல அல்லது கெட்ட ஒழுக்கம், மந்திரம், தந்திரம், மத
மனப்பான்மை, நடுத்தரக்கல்வி(+2 to UGdegree) மற்றும் அறிவுக்கூர்மை, மற்றும் ஆன்மீக முறைகள்.
குழந்தைகள், குழந்தைகள் உண்டு அல்லது இல்லை என்பதை சந்ததி குறிக்கிறது.
அங்கிகரிக்கப்பட்ட காதல் அல்லது அங்கிகரிக்கப்டாத காதல் விவகாரங்கள். அதன்
செல்வாக்கு உற்சாகம் மற்றும் இன்பத்திற்காக ஏங்கும் ஒரு உணர்வு உருவாக்குகிறது.
முதலீடுகள், சூதாட்டம், குத்தகை,
ஹோட்டல், கட்டடங்கள், விடுமுறைகள்.
பங்குகள் மற்றும் முதலீடு, கற்பழிப்பு, இதயம், கல்லீரல், மண்ணீரல்,
பாரம்பரியமான ஜோதிடர்கள், தூதுவர்கள்,
பிரபுக்களின் ஹவுஸ், பங்காளிகள், மன அழுத்தம், காயங்கள், விபத்துகள்,
தாயின் இளைய சகோதரர், தொப்புள் கீழே உடல்
1. ஐந்தாம் வீடு மூன்று
பலன்களைத் தருவது. அவை முறையே பூரவ புண்ணியம், குழந்தைபாக்கியம்,
நுண்ணறிவு!
2. பூர்வபுண்ணியம் என்பது முன்
பிறவியில் நாம் செய்த நன்மைதீமை களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் சான்றிதழ்.
அந்த சான்றிதழை வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை உள்ளதாக
அமையும்!
3. நிறைய ஜோதிடர்கள் இங்கேதான்
சறுக்கிவிடுவார்கள். பூர்வ ஜென் மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும்
முடியாது. ஓரளவிற்குச் சொல்லலாம்!
4 இந்த 5ஆம்
வீட்டிற்குக் காரகன் (authority) குரு. அவர் அந்த 5ஆம் வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன் மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும்,
புகழையும் அவர் (காரகன் குரு) பெற்றுத்தருவார்.
5. 1ஆம் வீடு லக்கினம், 5
ஆம் வீடு அவனுடைய குழந்தை. 9ஆம் வீடு அவனுடைய
(ஜாதகனுடைய) தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து 5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது 9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!! என்ன அற்புதம் பாருங்கள்!
6. ஐந்தாம் வீடு எண்ணங்களையும்,
உணர்வுகளையும் குறிப்பதாகவும் இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல
அமைப்புக்களைப் பெற வில்லை என்றால் ஜாதகன் வில்லங்கப் பார்ட்டி அல்லது டென்சன்
பார்ட்டி!
7. ஐந்தாம் வீட்டைப் பற்றி
அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று. ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் காரகன் குரு. அவைகள் நன்றாக இருந்தால்
நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர, கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.
8. அடுத்து உபரியாகப் பார்க்க
வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து அமர்ந்திருக்கும்
கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந் திருக்கும் கிரகம்,
அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!
9. மேஷம், சிம்மம்,
தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக அமையப் பெற்றால் அவர்
இயற்கையாகவே நேர்மையான வராக இருப் பார். அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க
முடியாது ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர் நேர்மை
தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!
10. அவர்களுடைய இந்த நேர்மை,
சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும். ஆனால் அவர்கள் அதைப்பற்றி
சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன உறுதியுடன் இருப்பார்கள். ஐந்தாம் வீடு
மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்!
11. ஐந்தில் ராகு அல்லது கேது
அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப்
பட்டுக் கொண்டிருப்பான்.
12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம்
வீடாக அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த
உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory)
உள்ளவராக இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
வைத்து இது மாறுபடும்
13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The
person will be highly optimistic and he takes life easy) காரணம்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். அதனால் எப்போதுமே ஜாலி.
14. மகர ராசியை ஐந்தாம் வீடாகப்
பெற்றவர்கள் பொதுவாக டென்சனா கும் ஆசாமிகள் Highly pessimistic and takes
life seriously கரணம் அதிபதி சனி!
15. கன்னி ராசியை ஐந்தாம்
வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும் மகர ராசிகளின் பலன்கள் கலவையாக
இருக்கும். காரணம் அதிபதி புதன் அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடு வார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை
களைப்பொறுத்து மாறுபடும்!
16. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள்
அடுத்த பிரிவினர். They will have different emotional set up. They are
concerned with conduct rather than motive. They are concerned with action
rather than thought or feeling. செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.
17. துலா ராசியை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள் யாதார்த்தமானவர் கள். More practical people!
18. கும்பராசியை ஐந்தாம் இடமாகக்
கொண்டவர்கள். உண்மையான மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக
நம்பலாம்.
19. மிதுன ராசியை ஐந்தாம்
இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள் அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால்
பெட்டியில் வைத்துப் பூட்டிவிடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச்
சமர்ப்பணமாகப்பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.ஆகவே விளக்கம்/ கதை இல்லை!
20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம்
வீடாகக்கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால்
அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்ககூடிய
வல்லமை பெற்றிருப்பார்கள்.
21. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம்
வீடாகக்கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபலமான Philosopherகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே இருப்பார்கள். இயற்கையாகவே இந்த
அமைப்பைக் கொண்டவர்கள் தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக
இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!
22. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்களைப்
பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமானபார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட
இவர்கள் ஒன்றைப் பார்த்துஎடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான்
சிறந்ததாகவும்இருக்கும்
23. இந்த அமைப்பினர் தலைமை
ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்தமூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது. காரணம் அதிபதி சந்திரன்.
24. மீனத்தை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் செயலை உடையவர்கள்.
அவர்களுடைய மன ஒட்டத்தை யாராலும்ஊகிக்க முடியாது.
25. ஜாதகத்தில் லக்கினம்,
ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம்
வீடும் அதி முக்கியமானது. அத்னால அவை மூன்றிற்கும் திரிகோணம்எனப்படும் முதல் நிலை
அந்தஸ்து (status) கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து 5
வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில்
எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும்
.இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு
தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் ,
சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால்
தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை
வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் ,
செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .
புத்திரர்கள்
உண்டாகுதலும் குரு கிரகமும்
குரு
கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டாக தடைகளை
உண்டு பண்ணும் .ஆனால் மீனா லக்கினத்திற்கு மட்டும் ஐந்தாம் இடத்தில் குரு உச்சமாக
இருந்தால் இந்த தடை வெகு காலத்திற்கு நீடிக்காது. ஆனாலும் ஆண் பிள்ளைகள் உண்டாவதிர்க்கு
பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம் உண்டாக்கும்.