கட்டிட பணியை தொடங்கும் பூஜை
கட்டிட பணியை தொடங்கும் பூஜை
படத்தில் காட்டியுள்ளபடி வட கிழக்கு பகுதியில் பள்ளம் எடுத்து
வடக்கு பக்கமாகத் திரும்பி ஐந்து சுமங்கலிகள் ஐந்து தணீண்ர் குடத்துடன் ஒன்றன்பின்
ஒன்றாக நின்று பள்ளத்தில் மஞ்சளும் குங்குமமும் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். வரை
படத்தில் காட்டியபடி வாழை இலை, சுவாமிபடம் செங்கல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக
கிழக்கு நோக்கி அமைத்துக்கொண்டு வாழையிலையில் தண்ணீர் தெளித்து பின்பு அவல் பொரி
கடலை, கடலை, அரைகிலோ நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை கலந்து வாழையிலையில் வைக்க
வேண்டும். பின்பு சுவாமிபடத்திற்கு குடும்பத்தலைவி நெய் அல்லது நல்லெணெய் விளக்கை
ஏற்ற வேண்டும். மனை உரிமையாளரின் தாய், மனைவி, மாமியார் ஆகிய மூன்று
பேரில்
ஒருவர் விளக்கை ஏற்ற வேண்டும். சுவாமி படத்தின் முன் வாழை இலையில் நாம் விருப்படும்
3 வகை கனிகள் வைத்து இரண்டு தேங்காய் உடைத்துத் தண்ணீர் சிதறாமல் வைக்கவும்.
அப்படியே தண்ணீர் சிதறி விட்டால் உடைத்ததேங்காய் உள் பகுதியில் நல்ல தணீரை ஊற்றி
வைக்க வேண்டும். பின் கற்பூரம் ஏற்றி உதிரி பூக்களைக் கொண்டு 108 முறை வாஸ்து
காயத்திரி மந்திரம், வாஸ்து அஷ்டோத்திரம் கூறி ஒவ்வொரு முறைம் வாஸ்து பகவான்
பாதத்தில் மலர் தூவ வேண்டும். பூஜை செய்யும் பள்ளத்தில் உதிரி பூக்கள், மஞ்சம் ,
குங்குமம் இடவேண்டும். பிறகு மூத்தவர்கள் முதலிலும் இளையவர்கள் இரண்டாவதும்
தீபாரதனைச் செய்ய வேண்டும். பிறகு காலி மனையில் முதலில் நான்கு எலுமிச்சம் பழம்,
கற்பூரம், எடுத்துக் கொண்டு தென் மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய
நான்கு பகுதிகளில் எலுமிச்சம் பழத்தின் மீது கற்பூரம் வைத்து ஜூவாலைடன் தீபாரதணைக்
காட்டி அதே இடத்தில் கற்பூரத்தை போட்டு எலுமிச்சம் பழத்தை இரண்டாக பிழிந்து தரையில்
போட வேண்டும். அதன் பின் தாம்பூலத் தட்டில் பூஜை செய்த பிரசாதத்தை வைத்து
அஷ்டதிக்கு பாலகர்களை மனதில் நினைத்து மனையில் குறியிட்ட எட்டுத் திசைகளிலும்
குங்குமம், மஞ்சம், பூ ஆகியவற்றை பூமியில் இடவேண்டும். பிறகு பிரசாதத்தைம் பூமியில்
இட வேண்டும். அதன் பிறகு மனையின் மத்திய பகுதியில் குங்குமம், மஞ்சம்பூ ஆகியவற்றைஇட
வேண்டும். அதன்பின் கட்டிட நிபுணர் 9 சுமங்கலிகள்கையால் பூஜை செய்த செங்கற்களை
வாங்கி பூஜை செய்ய எடுத்த பள்ளத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி முறையாக அடுக்கி
வைக்க வேண்டும். பிறகு நவதானியங்களை போட்டு கற்பூரதீபம் காட்ட வேண்டும். பூஜை
முடிந்த பின்பு பூஜைக்கு வந்த அனைவரும் கிழக்குமுகமாக நின்று உதவியாளர் ஒருவரை
அழைத்து எலுமிச்சம் பழம்,தேங்காய், பூசணிக்காய் ஆகிய மூன்றிலும் கற்பூரம் வைத்து
ஒன்றன் பின் ஒன்றாக முறையாக திருஷ்டி சுற்றி மனையின் முன் தெருவில் போட்டு உடைக்க
வேண்டும்.
பூஜை செய்த செங்கற்களை கட்டிடம் அமைக்கும் போது தென்மேற்கு அல்லது
வடகிழக்கு பாகத்தில் வைத்து கட்ட வேண்டும். வாஸ்து விழிக்கும் நேரத்தை 5 பாகமாக
பிரித்து நான்குபாக நேரத்தில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு 5வது பாக
நேரத்தில் பூஜை செய்து முடிக்க வேண்டும். இது போன்று முறையாக வாஸ்து பூஜை செய்து
கட்டிபணியைத்தொடங்கும்போது வீடு கட்டும் பணி தடையின்றி நடந்தேறும்.
வீட்டில்
உள்ளவர்கள் வாழ்வு சிறக்கும். அஷ்ட திக்கு பாலகர்கள் வீடு கட்டுவதற்கு
உதவியாகயிருபார்கள். சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில்உள்ளவர்களுக்குக் கிடைக்கும்.
வாஸ்து பகவான் காயத்திரி மந்திரம்
ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து
புருஷ ரசோதயாத்
அஷ்டதிக்கு பாலகர் துதி
அஷ்டதிக்கு பாலகர் ஈசானியா போற்றி
வளம் தரும் குபேரனே போற்றி
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி
பசுமை தரும் வருணனே போற்றி
அரும்மிகு நிருதி பகவானே போற்றி
தருமவான் மிருத் போற்றி
சுப அக்னி
பகவேனே போற்றி
உயர்வைத் தரும் இந்திரனே போற்றி
காக்கும் பிரம்மஸ்தான பகவானே
போற்றி போற்றி போற்றி!
ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் வீட்டின் ஒவ்வொரு பகுதியில் அமையும் அறைகளின் சிறப்பையும், அதைக்கையாள வேண்டிய முறையையுன் விபரம்