அஷ்டலட்சுமி யோகம்
ஆறாமிடத்து ராகு
அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கும் என்று சொல்வர். அது மட்டுமல்ல, குருவும்
கேந்திரங்களில் குறிப்பாக ராசியைப் பார்க்கும் விதத்தில் இருந்தால் தான் அந்த
அஷ்டலட்சுமி யோகம் முறையாக செயல்படும். அதே அமை�பு இ�பொழுது கோச்சாரத்தில்
இருக்கிறது. மகரத்தில் உள்ள குரு கடக ராசியை�ப் பார்க்கிறார். எனவே, எட்டு
வகை லட்சுமியின் அருளும் உங்கள் இல்லத்திற்கு வந்து சேரப்போகின்றது.
பணவரவு பெருகும்.
சேமிப்பு உயரும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில்
தொடர்ந்து வெற்றி கிடைக்கும். ஒருசிலர் பழைய தொழிலை மூடிவிட்டு புதிய தொழில்
தொடங்க முயற்சிப்பர். அந்த முயற்சியும் கை கூடும். உத்தியோகத்தில் இரு�பவர்கள் பல
வருடங்களாக பதவி உயர்வு கிடைக் காமல் ஏக்க பெருமூச்சு விட்டவர்கள் எல்லாம், இப்பொழுது
ஆச்சர்யப்படும் விதத்தில் பதவி உயர்வு காணப் போகிறார்கள்.
உயர் அதிகாரிகளின்
தொல்லை களை தாக்கு பிடிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு விடிவு காலம்
பிறந்து விட்டது. மேலதிகாரிகள் கூட மாற்றலாகிச் செல்வர். உங்களுக்குரிய வேலை
உறுதியாகும்.
ஆசைப்பட்ட பொருட்களை
அடைப்ம் நேரமிது. ஓசை�ப்படாமலேயே
ஓராயிரம் பணிகளைச் செய்யப்போகிறீர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் ராகு- கேதுக்கள்
இருக்கும் நிலையறிந்தும்,
அதன் பாதசாரபலம் அறிந்தும் அதைப் பார்க்கும் கிரகத்தின் நிலையறிந்தும்,
அதற்குரிய யோகபலம் பெற்ற நாளில் உங்கள் ராசிக்கு உடனடிப் பலன் தரும்
ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
பனிரெண்டாமிடத்து
கேதுவால் பலவித விரயங்கள் வந்து சேரலாம். குறிப்பாக, வரும் விரயங்களை
சுபவிரயங் களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
மனைவி, மக்களுக்கு
வேண்டிய அளவு ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுக்கலாம்.
மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விடலாம். பிள்ளைகளின் கல்யாண முயற்சிக்கு கைகொடுத்து
உதவ முன் வருவீர்கள்.
பழைய வீட்டை
புதுப்பித்து புதிய வீடாக்கும் பணி வெற்றி தரும். நாகரீக முறையில் நல்ல அமைப்பில்
வீடு கட்ட வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உறவினர்களின் இல்லத்தில்
நடைபெறும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு கொடுத்துதவுவீர்கள். வெளிநாட்டு பயணம்
விரும்பும் விதத்தில் கைகூடும்.