புதன்
புதன் நியூட்ரல் பிளானெட். (சமநிலைக் கிரகம்) நல்லவனுடன் சேர்ந்தால் ஜாதகனின்
புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன் சேர்ந்தால் கெட்ட வழியில்
வேலை செய்யும். அதாவது புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் ஆக்க வழியில் ஜாதகன் வேலை
செய்வான். அதே புதன் சனியுடன் சேர்ந்தால், ஜாதகன் ஆக்க வழிகளுக்கு எதிர்மாறான
விஷயங்களில் அற்புதமாக வேலை செய்வான். ஜாதகத்தில் புதனும் வக்கிர நிலைமையில் (rotrograde)
இருந்தாலும் புத்தி வக்கிர சிந்தனைகளில்தான் அதிகமாக ஈடுபடும்.
வக்கிர சிந்தனை என்றால் என்ன? ஒரு சின்ன உதாரணம். மாற்றான் தோட்டத்து
மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான் முடிந்தால் முயற்சித்தும்
பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான் பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான்.
அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால்,
ஜாதகன் கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது
பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான். தகாத வேலை
என்றால் என்ன? பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில் இருந்து
வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது வரை ஆயிரக்கணக்கான தகாத
வேலைகள் இருக்கின்றன். பட்டியல் இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா
என்ன? ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால்,
ஜாதகன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான்.
புதனின் சொந்த வீடுகள்: மிதுனம் & கன்னி
உச்ச வீடு: கன்னி
நீச வீடு: மீனம்
நட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்,
சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை வீடு: கடகம் மட்டுமே!
சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் கிரகத்திற்கு 100%
வலிமை உண்டு.
சம வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 75% பலன்
உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)
நட்பு வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 90% பலன்
உண்டு.
பகை வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு 50% பலன்
மட்டுமே உண்டு
நீச மடைந்த கிர்கங்களுக்குப் பலன் எதுவும் இல்லை!
உச்சமடைந்த கிரகங்களுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!
இந்த அளைவையெல்லாம் நான் ஸ்கேல் வைத்து அளந்து சொல்லவில்லை
அனுபவத்தில் சொல்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
அஷ்டவர்க்கத்தை வைத்துப் புதனுக்கான பலன்கள்
புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது
3ற்குக் கீழான பரல் களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்
பலன்கள்.
புதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும்
நட்பு பராட்டும் மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து
கொள்ளும்
ஆற்றலுடனும் ஜாதகன் இருப்பான்.
புதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
புதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு,
மகிழ்ச்சி, செல்வம், சொத்து
சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்
புதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக
இருப்பான் அல்லது ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான் Either he
will be a ruler or associated with rulers
========================================================
இருக்கும் இடத்தை வைத்துப் பலன் பார்ப்பது
உதாரணத்திற்கு சிம்ம லக்கினத்தை எடுத்துக் கொள்வோம்
அதுதான் சுவாமி லக்கினங்களிலேயே ஹீரோ லக்கினம். அதனால்தான்
அதற்கு சிங்கத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.
சூரியனின் வீடு அல்லவா அது!
1. சிம்ம லக்கினத்திற்கு புதன், இரண்டாம் வீடு
(House of Finance, Family affairs & speech) மற்றும்
பதினொன்றாம் (House of Profits - லாபஸ்தானம்) ஆகிய
வீடுகளுக்கு அதிபதி. சிம்ம லக்கினக்காரர் களுக்கு செவ்வாய் (யோக காரகன், 4
& 9ஆம் வீடுகளுக்கு அதிபதி அவன்) எப்படி முக்கியமோ அப்படி
புதனும் முக்கியமானவன். அந்த லக்கினக்காரகளுக்குப் புதன், கேந்திர,
திரிகோணங்களில் இருப்பது நல்லது. குறிப்பாக ஏழில் இருப்பது நல்லது.
இருந்தால் ஜாதகனுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, கையில்
எப்போதும் காசு பணம், மயக்கும் பேச்சுத் திறமை, செய்யும் வேலையில் அல்லது தொழிலில் அதிக வருமாணம் கிடைக்கும்.
2. 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் எதிரான பலன்கள்
=========================================================
கன்னி லக்கினக்காரகளுக்கு, புதன் லக்கினாதிபதி
மற்றும் பத்தாம் இடத்து அதிபதி. ஆகவே கன்னி லக்கினக்காரகளுக்கு அவன்தான் முக்கிய
மானவன். அவன் ஜாதகத்தில் மறையக்கூடாது (அதாவது 6, 8, 12 ஆம்
இடங்களில் போய் அமர்ந்து கொண்டு சேட்டை செய்யக்கூடாது)
அப்படி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு
உரிய வேலை கிடைக்காது. வாழ்க்கையில் உயர்வும் கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும்
12ஆம் வீடு ஆகிய இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய
ஸ்தானத்தைக் கவனத்தில் கொள்ளவும்.
அவன் நன்றாக இருந்தால், எல்லா
பாக்கியங்களையும் அவன் தேடிப் பிடித்துக் கொடுப்பான்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விருச்சிக லக்கினத்துக்காரர்களுக்கு புதன் ஆயுள்காரகன் (8ஆம் இடத்து அதிபதி. அதோடு லாபாதியும் அவன்தான்.
இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து முக்கியமானவன்
=======================================================
தனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி (இல்லத்தரசி
அல்லது அரசன்)
10ஆம் இடம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதி அவன் இந்த
லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்துப் புதன் முக்கியமானவன்
=======================================================
மகரம்: 6ஆம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) புதன் பாதி வில்லன் பாதி ஹீரோ என்கின்ற நிலைமையில் புதன் இந்த
லக்கின வேலைகளைச் செய்வான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கும்பம்: 5th Lord & 8th Lord
மீனம்: 4th lord and 7th lord
மேஷம்: 3rd lord and 6th lord
ரிஷபம்: 2nd lord and 5th lord
மிதுனம்: Lagna lord and 4th lord
கடகம்: 12th lord & 3rd lord
மேற் பத்திகளில் கூறிய முறைகளிலேயே இவற்றிற்கும் பலனை உணர்ந்து
கொள்ளுங்கள்
BUDHA: News paper vendor/reporter, teacher,
novelist, writer, author, painter, landlord, compositer, postman, broker, draftsman,
inspector, examiner, publisher, printer, editor, book binder, book sellers,
merchant, journalist, clerk, accountant, mathematicians, public speaker,
ambassador, imports and exports, air and land transports.
ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி
நன்றாக இருக்கும் இல்லையென்றால் இல்லை புத்தி என்பது இங்கே knowledge, intelligence
and smartnessஐக் குறிக்கும்! நன்றாக இருப்பது என்பது என்ன?
1. புதன் சொந்த வீட்டில் இருப்பது 2. புதன்
உச்சம் பெற்று இருப்பது 3. நட்பு வீடுகளில் இருப்பது.
அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும்
அந்த வீடுகள் அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை
பெற்றவர் ஆகிவிடுவார். சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக
இருப்பார் அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல் களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய
சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்கும் புதனும் வலிமையானவரே!அஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை
நான் உங்களுக்கு வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அதை யாரும் கண்டு கொண்டதாகத்
தெரியவில்லை!
அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம்
ஜாதகத்தின் பலனை, நாமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
யாரையும் கேட்க வேண்டாம். 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட
வீடுகள் நன்றாக இருக்கும் நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும். 25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக
இருக்கும் 20 முதல் 25 வரை பரல்களைக்
கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே தரும் 20ம் அதற்குக் கீழான
பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும் மோசமான பலன்களே கிடைக்கும். அதேபோல
ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும்
4 பரல்கள் என்பது சராசரி 3 என்பது
சுமாரானது 2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை.
மோசமானது. வலிமையில்லாது போய்விடும் அனைவருக்கும் 337 பரல்கள்தான்.
அதை மறந்து விடாதீர்கள். அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ
இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அதாவது 1, 9, 10, 11 ஆகிய
நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள்
இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்.
அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி கரமாகவும் இருக்கும். அதேபோல எல்லா
வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்ட
ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்
நல்ல நிலைமையில் இருக்கும் புதன் மட்டுமே
ஜாதகனுக்குப் பேச்சாற்றலைக் கொடுக்கும். பேச்சாற்றல் அரசியலில்
எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
7. புதன்
"பொன் கிடைத்தாலும், புதன்
கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு
கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும்
திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை,
போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி
துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு
விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க
உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில்
வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து
வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள்,
மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான
பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள்,
பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே.
கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள்,
கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும்
நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும்.
புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும்
காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில்
உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள்
ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி
விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி! உங்கள்
ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து
கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும்.
பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத்
தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3.
வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை
நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில்
தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள்,
யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே
இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள்
விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8.
கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால்
ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக
எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும்,
மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.