சில ஆன்மீக குறிப்புகள்
எண்ணெயைப் பயன்படுத்துவதை
பெருமளவு குறைப்பது நல்லது.
ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில்
கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள்
புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில்
பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை
முடக்கிவிடும்.
தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி
அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத
அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
வீடு மற்றும் தொழிற்சாலைகளில்
மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
இயேசு கிறிஸ்து விஸ்வகர்மா
குலத்தில் அவதரித்தார்.
நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும்
புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத்
தரும்.ஒட்டியாணம் துர்
ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
காலில் அணியும் மிஞ்சி பெண்ணின்
காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை
நீக்கும்.
கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய்
அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
நீங்கள் குரு உபதேசம் பெற
விரும்புகிறீர்களா?
சுவாதி மற்றும் விசாகம்
நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்
விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
கறுப்புத் துணிப் பக்கம் காகம்
வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.